tamilnadu

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை துவங்கியது

தஞ்சாவூர், பிப்.21 -  பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம்  குறித்து, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை துவங்கி யது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி தஞ்சாவூர் மாவட்டம்,  மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பூச்சி மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சி.பி.ஐ.  விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை சி.பி.ஐ. மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட நான்கு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர் பாக சி.பி.ஐ., சிபிஐ இணை இயக்குனர் வித்யா  குல்கர்னி உட்பட 10 பேர் கொண்ட குழு வினர் மாணவி படித்த விடுதி மற்றும் பள்ளிகளில் விசாரணையை துவக்கியுள்ளனர்.  விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையையும் மற்றும் பள்ளி சுற்றுப்புற பகுதிகளையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விடுதி தரப்பிலும் விசாரித்து வருகின்றனர்.