சென்னை, ஜூலை 1- கூட்டணி வேண்டுமென்றால் பாஜக வரட்டும்; அவர்களுக்காக காத்திருக்க முடியாது என்று ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் “அதிரடி”யாக கூறியுள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியின் அரசியல் ஆலோசகர் பண் ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 1 அன்று நடைபெற்றது. இதில் 87 மாவட்ட செயலாளர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட் டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்த ரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார், அதுபற்றி கேட்க வேண்டாம். அமைச் சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுந ருக்கே தெரியவில்லை. கூட்டணி தொடர் பாக எங்களுடன் நேரடியாக பாஜகவினர் பேசி வருகிறார்கள். வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும்; அவர்கள் தய வுக்காக காத்திருக்க வேண்டியதில்லை; பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது; தினகரன் நமக்கு துணையாக தோழமை யாக செயல்பட உள்ளார். சசிகலாவை சந் திக்க நேரம் கேட்டுள்ளோம்; விரைவில் அழைப்பு வரும் என்று தெரிவித்தார்.
இபிஎஸ்ஸூடன் இணையவே முடியாது: ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எடப் பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒரு முறை இணைந்ததற்கான பாடத்தை, அவர்கள் நமக்கு கற்பித்துவிட்டனர். பழ னிசாமி அரசு கவிழக்கூடிய சூழல் இருந் தது; நாம் ஆதரவு அளிக்காமல் இருந்தி ருந்தால் அன்றே கவிழ்ந்திருக்கும். ஜெய லலிதா விட்டுச் சென்ற ஆட்சி கவிழ்ந்து விடக் கூடாது என்பதாலேயே ஆதரவு அளித்தோம். பழனிசாமி எப்படி முதல மைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சி தலைமை பொறுப்புக்கு வரு பவர்கள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொண்டர் களுக்கு எம்ஜிஆர் வழங்கிய அடிப்படை உரிமையை பறித்துவிட்டனர். எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிக்க இந்த பழனிசாமி யார்? கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும்; விரை வில் தேதி அறிவிக்கப்படும் என்று தெரி வித்தார்.