tamilnadu

img

பொதுவுடமைக் கொள்கைகளை திக்கெட்டும் கொண்டு சென்று போரில்லா உலகம் படைப்போம்!

சென்னை, டிச. 24- பொதுவுடமை கொள்கைகளை திக்கெட்டும் கொண்டு செல்வோம், போரில்லா உலகம் படைப்போம் என சென்னை யில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பில் “உலக சமாதானம் மதநல்லிணக்கம் மக்கள் ஒற்றுமை” கருத்த ரங்கம் சென்னையில் வியாழனன்று (டிச. 22) நடைபெற்றது. தலைமைக்குழு உறுப்பினர்கள் வி.பி.ஆத்ரேயா, கே.முத்தி யாலு ஆகியோர் தலைமை தாங்கினர். செந்தில் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், உலக சமாதானம் என்பது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையுடன் தொடர்புடையது. உலகில் போர் நடந்து கொண்டே இருக்கிறது.  போர் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்திய, தமிழக வரலாற்றில், நாம் எல்லாம் தமிழ்ச்சமூகம் என்று பெருமையோடு, சேர, சோழ, பாண்டியர் குறித்தெல்லாம் பெரு மையோடு பேசுகின்றோம். ஆனால் சேரர்களுக்கும், சோழர்க ளுக்கும், பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடைபெற்ற போரில் எவ்வளவு மக்கள் மடிந்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆயுதங்கள் ஒருவ ரைத்தான் கொல்ல முடியும். ஆனால் நாகரீக வளர்ச்சி, மனித  வளர்ச்சி ஏற்படும் போது இந்த போர் எல்லாம் ஒழிந்து மனித சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மொத்தமாக கொல்லப்படும் அள வுக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ஏவுகணையின் மூலம் ஒரு தீவையே அழித்துவிட முடியும். நவீன அணு ஆயுதம் மூலம் தற்போதைய தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலை முறையினரும் கூட வாழ முடியாது அல்லது உடல் ஊனமாகத் தான் பிறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட இரண்டு அணு குண்டுகளின் தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட கொடூரமான அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண் டாவது உலகப் போர் முடிந்து விட்டது. இனி மூன்றாவது உலகப் போர் வந்தால் உலகின் வரலாறு முடிந்து விடும். ஒட்டுமொத்த மனித சமூகத்தையே அழிக்கக் கூடிய அளவிற்கு இன்றைக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்து வைத்திருக்கிறார்கள். ஏன், போர் இல்லாமல் மனித சமூகம் வாழ முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.  எத்தனையோ மதங்கள் தோன்றியிருக்கின்றன, எத்தனை யோ சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். மதங்கள் மனிதனை பக்குவப்படுத்துவதற்காகத்தான் உருவாக்கப்பட்டதா கக் கூறப்படுகிறது. ஆனால் மதங்கள் தோன்றினாலும், எத்த னையோ சிந்தனையாளர்கள் தோன்றினாலும் கூட உலகில் போர் என்பது மட்டும் முடியாத தொடர் கதையாக நீடித்துக் கொண்டிருக்கிறதே இது ஏன் என்ற கேள்வியை நாம் ஒவ்வொரிடத்திலும் எழுப்ப வேண்டிய தேவை உள்ளது.

தனியுடமை

உலகில் என்றைக்கு தனியுடமையை மையப்படுத்தும் ஆட்சி அதிகாரம் உருவானதோ அன்றைக்கு உருவானதுதான் போர் என்பதை மறந்து விடக்கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ராணுவ மையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த ராணுவ மையங்கள்? அதன் மூலம் ஒட்டுமொத்த உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். தற்செயலாக அங்கே இருக்கிற அணு ஆயுதங்கள் வெடித்தால் கூட உலகம் அழிந்து போகும்.  அமெரிக்கா உருவான 1700ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இன்று வரை நடைபெற்ற அனைத்துப் போரிலும் அமெரிக்கா விற்கு தொடர்பு இருக்கும். முதலாவது உலகப் போரில் ஒரு கோடி பேரும், 2ஆவது உலகப் போரில் மூன்று கோடி பேரும் இறந்தார்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் 3ஆவது உலகப் போர் நடைபெற்றால் 600 கோடி பேரும் அழிந்து போவார்கள். எவ்வளவு பேர் மடிந்தார்கள் என கணக்கிட ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.     எங்கோ நடைபெறும் போரில் இங்குள்ளவர்கள் ஏன் பாதிக் கப்பட வேண்டும். அமெரிக்கா போரை விரும்புவது மட்டுமல்லா மல் பிற நாடுகள் மீது போரை திணித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானம் தாங்கி கப்பல்களை கடல்க ளிலே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு  கப்பலில் நூற்றுக் கணக்கான விமானங்களும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவு கணைகளும் உள்ளதாகவும், அங்கிருந்தே தாக்கக்கூடிய வல்லமை பெற்றது என்றும் கூறப்படுகிறது.  

தினசரி 150க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ராணுவத்திற்காக 2 லட்சம் கோடி டாலர் செலவு செய்யப்பட்டுள் ளது. இவையெல்லாம் யாருடைய பணம், உழைப்பாளி மக்க ளின் பணம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். இந்த 2 லட்சம் கோடி டாலரை மக்களின் மேம்பாட்டிற்கு செலவழித்தால் உலகிலே பசியே இருக்காது, உலக மக்கள் அனுபவிக்கும் பல கொ டுமைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

ராணுவத்திற்கு நிதி

இந்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை வெறும் 70 ஆயிரம் கோடி ரூபாய்தான். பெண்கள், குழந்தைகள் வளர்ச்சிக்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு ஒதுக்கக் கூடிய தொகை மிகக் குறைவு. ஆனால் ராணுவத்திற்கு ஐந்தே கால் லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ராணுவத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. உலகில் இப்போது எந்த நாடு இந்தியாவுடன் போரிடத் தயாராக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பைகுறைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கும் சதித்திட்டத்தில் எல்லா நாடுகளும் சிக்கிக் கொள்கின்றன. பசி பட்டினியில், வேலையில்லா திண்டாட் டத்தில் உலக நாடுகள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போது, ராணுவத்திற்கு ஏன் இவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.  

கார்ப்பரேட் நிறுவனங்கள்

ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யக் கூடிய கார்ப்ப ரேட் நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கக் கூடிய பெரும்பாலான நிதி இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. எனவேதான் ஒன்றிய பாஜக அரசு, ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க முயற்சித்து வருகிறது. சமாதான சகவாழ்வு என்ற கொள்கையில் உறுதியாக இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை யாக மாறிவருகிறது. ஒன்றிய பாஜக அரசு மோசமான உள்நாட்டுக் கொள்கைகளையும், அதைவிட மோசமான வெளிநாட்டுக் கொ ள்கைகளையும் கடைப்பிடிக்கிறது. இது இந்தியாவின் எதிர்கா லத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்றும் அவர் கூறினார். வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்திருக்கும் போது, அமெரிக்கா போரை நிறுத்துவதற்கு காரணம் வியட்நாம் மக்க ளுடைய போராட்டத்தினால் மட்டுமல்ல, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகில் உள்ள மக்கள் அனைவரும் அந்த யுத்தத் திற்கு எதிராக குரல் கொடுத்ததுதான். எனவே நாம் நடத்தும் எந்த இயக்கமும் வெற்றல்ல. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான். உலகம் முழுவதும் உள்ள மக்கள் எங்கு போர் நடந்தாலும் அதற்கு எதிராக வெகுண்டெழுந்து குரல் கொடுத்தால் நிச்சயம் போர் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உலகம் முழுவதும் எப்போது தனியுடமை ஒழிக்கப்பட்டு, பொதுவுடமை சமூகம் தழைக்கிறதோ அப்போதுதான் போரில் லாத உலகம் அமையும். “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம், பொதுவுடமை கொள்கைகளை திசையெட்டும்  சேர்ப்போம், புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்” என்று பாரதிதாசன் பாடி னாரே, அந்த பொதுவுடமை கொள்கைகளை திக்கெட்டும் கொண்டு சேர்ப்போம், போரில்லா உலகம் படைப்போம் என்று கூறினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், உலகில் வாழும் எந்த மக்களும் பசி யால் வாடக் கூடாது என்பதைத்தான் அனைவரும் எடுத்துரைத் துள்ளனர். ராமாயணத்தில் ராமன் ஆட்சியிலே கொள்வாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்று கூறப்படுகிறது. ராமன்  ஆட்சி நடத்தினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அந்த ராமன் ஆண்டதாக கூறப்படும் இந்த நாட்டில்தான் இன்றை க்கு தினசரி 20 கோடி மக்கள் இரவு உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் உறங்குகிறார்கள். மதமோதல்களால் பலர் உயிரி ழக்கிறார்கள். போர் இல்லாத உலகில்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அப்படியென்றால் உலகம் முழுவதும் பொதுவுடமை சமூகம் அமைய வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் இருக்கும் வரை போர் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்வது விற்பனை செய்வதற்குத்தான். அதுபோல் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்கள், அணு ஆயுதங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்றால் உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் போர் நடைபெற வேண்டும். அதுதான் ரஷ்யா - உக்ரைன் போர்.   உக்ரைனை ஏகாதிபத்திய நாடுகள் தன் கீழிருந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. உக்ரைன் நேட்டோ நாடுக ளோடு இணைந்தால் அது பேராபத்தாக முடியும். எனவே நேட்டோ வோடு சேராதே என ரஷ்யா அறிவுறுத்துகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் நாங்கள் படைகளை அனுப்புவோம் என நேட்டோ நாடுகள் கூறின. ஆனால் இதுவரை எந்த நாடும் நேர டியாக ஒரு ராணுவ வீரரை கூட அனுப்பவில்லை. ஆனால் அதற்கு மாறாக என்ன உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது என்றால் ராணுவத் தளவாடங்களும், அணு ஆயுதங்களும். இவை அனைத்தும் இலவசமாக அல்ல, அனைத்தும் விற் பனை செய்யப்படுகிறது. இதுதான் ஏகாதிபத்திய நாடுகளின், கார்ப்பரேட் நிறுவனங்களின் சதித் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மதத்தை, சாதியை பயன்படுத்துவது, கடவுளை, மூட நம்பிக் கையை பயன்படுத்துவது என எல்லா சாகசங்களையும் மேற் கொள்ளும். இதனை முறியடிக்க வேண்டும் என்றால், போர் இல்லா உலகம் அமைய வேண்டும் என்றால் பொதுவுடமைச் சமூகம் உலகம் முழுவதும் அமைய வேண்டும். அதை நோக்கி பய ணிப்போம், மதவாத, பாசிச சக்திகளை மக்களிடத்திலே அம்பலப் படுத்தி தனிமைப்படுத்துவோம் எனக் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர்கள் ஐ.ஆறுமுகநயினார், ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோரும் பேசினர். தேசியக் குழு உறுப்பினர் டி.செந்தில் குமார் நன்றி கூறினார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராஜசேகர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், அமைப்பின் மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர்  கே.சி.கோபிகுமார், க.சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரத்தை ஆதரித்த நாம்...

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக பொதுச்செயலாளர் அருண் குமார் பேசுகையில்,  இந்தியாவில் தற்போது அதிகாரம் மிக்கவர்கள் 85விழுக்காடு ஊடகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பச்சைச் சட்டை அணிந்துள்ள கதாநாயகன், காவி நிற உடை அணிந்துள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்வது குறித்த திரைப்படத்தை மத்தியப்பிரதேசத்தில் திரையிட அனுமதிக்கமுடியாது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் கூறுகிறார். ஏனென்றால் அந்தப்படம் லவ் ஜிகாத்தை நியாயப்படுத்தும் வகையில் உள்ளதாம். இதுகுறித்து ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.  இந்து பெண் ஒரு முஸ்லீம் வாலிபரை அல்லது முஸ்லீம் வாலிபர் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதும் காதலிப்பதும் அவர்களது தனிப்பட்ட உரிமை என்பதை நிலைநாட்டும் வகையில் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதில்லை. அணியும் உடையின் நிறத்தை வைத்து பிரச்சனை எழுப்புவது அயோக்கியத்தனம்.  1998 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கிறார். அவர் இந்த உடை குறித்து பேசுவது விந்தையாக உள்ளது. மக்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்படுகின்றன. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள ஆபத்து குறித்து ஊடகங்கள் பேச மறுக்கின்றன. சாதிப் பாகுபாடு, மதசகிப்பின்மை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தலித் மற்றும் ஆதிவாசிகள் மீதான பாகுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை ஊடகங்கள் விவாதிக்கவேண்டும்.  தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து சில கடல் மைல் தொலைவில் உள்ள டிகோகார்ஷியா தீவில் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை நிறுவியுள்ளது. அதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

பல்லப்சென் குப்தா

அகில இந்திய பொதுச்செயலாளர் பல்லப்சென் குப்தா பேசுகையில், உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.இது அந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்ல.இது ரஷ்யா-அமெரிக்கா இடையே நடைபெறும் போர் ஆகும். ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 31 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பின் கொடூரமான திட்டத்தின் ஒருபகுதியே இந்த போர். அந்த போரின் அடிப்படைக் காரணங்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் கடமை நம்மைப் போன்றவர்களுக்கு  உள்ளது.  உக்ரைனின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கத்தோலிக்க தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அந்நாட்டின்  கிழக்குப் பகுதியில் ரஷ்ய மொழிபேசுவோர், ரஷ்ய பழமைவாத கிறிஸ்துவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே இந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல.இது இந்த இரு பிரிவினருக்கு இடையே எழுந்துள்ள மோதல் தான். 

பாலஸ்தீனம் சுதந்திரம் அடைவதற்கான ஆதரவு தந்தநாடு இந்தியா. வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற ஆதரவு அளித்தோம். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளித்தோம். எனவே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுதந்திரப்போராட்டம் வெற்றிபெற ஆதரவு அளித்த நாடு இந்தியா. பங்களாதேஷ் நாடு சுதந்திரம் அடைந்தபோதும் நாம் ஆதரவு அளித்தோம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். ஆனால் இன்று பாஸ்தீனத்தில் ரத்தம் வடிகிறது. மோடி அரசு ஆதரவுக் கரம் நீட்ட மறுக்கிறது. நாட்டில் இன்று ஆட்சியாளர்கள் மக்களை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் ஒற்றுமையுடன் செயல்படும் போது  பாஜக அல்ல எந்த சக்தியாலும் நம்மைப் பிரிக்கமுடியாது. பாஜக தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் நாட்டுமக்களின் ஒற்றுமைக்கு ஆபத்து. எனவே அதை முறியடிக்க மக்கள் ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்றார் சென்குப்தா.