tamilnadu

img

இதய தமனியில் படிந்த கால்சியம் நவீன சாதனத்தால் அகற்றம்

சென்னை, பிப்.28- நோயாளி ஒரு வரின் இதய தமனி யில் படிந்திருந்த அதிகப்படியான கால்சியத்தை நவீன தொழில்நுட்ப சாதன உதவியுடன் சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினர் அகற்றினர். இதுகுறித்து மருத்துவர் செங்கோட்டுவேலு  கூறியதா வது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்த தில் இதய தமனியில் அதிகப்படி யான கால்சியம் படிந்திருந்தது தெரியவந்தது. இதற்கு தீர்வு காண மீண்டும் பைபாஸ் அறுவை  சிகிச்சை அளிப்பதற்கு அவரது  உடல்நிலை ஒத்துழைக்க வில்லை. கால்சியம் படிந்த ரத்த  குழாய்களை சரி செய்வது கடினம்.  வழக்கமான பலூன்  ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை  முறையும் பலன் அளிக்க வில்லை. இம் மாதிரியான கால்சி யம் படிந்த ரத்த குழாய்களுக்கு சிகிச்சை அளிக்க உல களவில் பல சாதனங் கள் உள்ளன.  சுழலும் அதிவேக அறுவை  சிகிச்சை ரோட்டா  சாதனம், இன்ட்ரா வாஸ்குலர், லித்தோட்ரிப்சி, சிறப்பு பலூன்கள் போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. சுழலும் அதிவேக அறுவை சிகிச்சையான  ரோட்டா  சில ஆண்டுகளுக்கு முன்பு அறி முகப்படுத்தப்பட்டது. அதே போல மற்றொரு கருவியான “ஆர்பிட்டல் அதிரெக்டமி’’ அல்ட்ராசவுண்ட் அலைகளை அடிப்படையாக கொண்டது. நோயாளிக்கு ஸ்டென்ட் பொருத் துவதற்கு முன்பு கால்சியம் அடைப்புகளை சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த  கருவியை கொண்டு நோயாளி யின் இதய தமனியில் இருந்த கால்சியம் அகற்றப்பட்டது.  குறிப்பாக 125 மிமீ, வைரம்  பூசப்பட்ட  கருவி, கால்சியம் படி வத்தை 2 மைக்ரான் அளவிலான  மணல் போல் நுண்ணிய துகள்க ளாக மாற்றியது. இந்தியாவில் இதுபோன்ற சிகிச்சை முறை முதல் முறையாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.