சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசு,கோப்பைகளையும், பரிசு தொகையையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன் , காளிமுத்து,நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சத்தியேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.