tamilnadu

img

பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க பிஎஸ்என்எல் ஊழியர் மாநாடு அறைகூவல்

சென்னை, மார்ச் 24 - அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குமாறு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தமிழ்நாடு மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 9ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு மார்ச் 18-19 தேதிகளில் தென்காசியில் எழுச்சியோடு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் அமைப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் க.சுவாமிநாதன், பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளர் முரளீதரன் உள்ளிட்டு தோழமை சங்கங்களின் தலைவர்கள் பேசினர். 

இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பணி ஓய்வு பெற்ற சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச்செயலாளர் எஸ். செல்லப்பா மற்றும் பத்து மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றையை உடனடியாகவும்,  5ஜி அலைக்கற்றையை உரிய காலத்தி லும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தேசிய பண மாக்கல் திட்டம் உட்பட எந்த வடிவத்திலும் பிஎஸ்என் எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மய மாக்கக் கூடாது. ஊழியர்களின் ஊதியஉயர்வு, ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் ஊதிய நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத  பொதுத்துறை விரோத, கொள்கைகளைக் கைவிடக் கோரி மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ள  அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்த அறைகூவல் விடுக்கும் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  

நிர்வாகிகள் தேர்வு

சங்கத்தின் மாநிலத் தலைவராக  ஏ. பாபு ராதா கிருஷ்ணன், செயலாளராக பா. ராஜூ, பொருளாளராக அஸ்லாம் பாஷா உள்ளிட்ட 21 பேர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.