tamilnadu

img

அகதிப் படைப்பாளர்களின் நூல் அறிமுகம், பாராட்டு விழா

அகதிப் படைப்பாளர்களின்  நூல் அறிமுகம், பாராட்டு விழா

திருச்சிராப்பள்ளி, ஏப்.28-  திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புத்தக தின விழாவில் “அகதிப் படைப்பாளர்களின் படைப்புகள் ” நூல் அறிமுகம் மற்றும் படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் சிவ. வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். விழாவில், எழுத்தாளர் கௌரி காமாட்சி எழுதிய மூன்றாம் தலைமுறை சிறுகதை தொகுப்பு குறித்து கவிஞர் இளங்குமரன், கவிஞர் சரோஜினி விபோகன் எழுதிய “கார்கால கனவுகள்” கவிதை தொகுப்பினை கவிஞர் சுமித்ரா மாதவன், “காற்றின் மொழியின் கவிதை” என்கிற கவிதை நூல் குறித்து கவிஞர் சுந்தர்ராஜ், கவிஞர் சுகன்யா ஞானசூரி எழுதிய “ஊமல் கவிதை தொகுப்பு” குறித்து முனைவர் பாலின் ஆகியோர் நூல் அறிமுகம் செய்தனர் . ஏற்புரையில் மூவருமே அகதி இலக்கியம் தான் தங்கள் அடையாளம் என்பதையும், இந்திய குடியுரிமை தான் தங்களுக்கான நிரந்தர தீர்வு என்பதையும் பகிர்ந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் நாகநாதன் நன்றி கூறினார்.