இராமநாதபுரம், ஜன.25- இராமேஸ்வரம் கோவில் ராஜகோபு ரம் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பகுதி யில் இருந்து கோவிலுக்கு செல்லக்கூடிய பாதையை கம்பி பேரிகார்டு வைத்து முற்றிலுமாக அடைத்து உள்ளூர் பொது மக்களும் வெளி மாநிலத்தவர்களும் கோவி லுக்கு வருவதை தடுத்துள்ளனர். இதனைக் கண்டித்தும் தடுப்புகளை அகற்றி வழக்கம்போல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வருவதற்கான பாதை யைத் திறந்து விட வேண்டும். பிரகாரங்க ளில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் ஜி. சிவா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணா கரன் ஆகியோர் பேசினர். தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.