அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
சென்னை, ஜூன் 27 - கடந்த 30 ஆண்டுகளில் நடை பெறாத வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண் ணறிவு பல்வேறு துறைகளில் மிகப்பெ ரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகரா ஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு மாணவர் களுக்கு கல்வி சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், “தொழில்நுட்பத் துறையில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது ஒரு காலத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்தது. அதனால்தான் தொழில்நுட்பத் துறையில் பல மாற்றங்களையும், முன்னேற்றங்க ளையும் நாம் அடைந்துள்ளோம். அன்றைக்கு கணினி எப்படி வந்து மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அப்படித்தான் இப்போது செயற்கை நுண்ணறிவு வந்திருக்கிறது. இதற்கு முன்பு நாம் அடைந்த வளர்ச்சிக்கும், இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நாம் அடையப் போகும் வளர்ச்சிக் கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் எண்ணற்ற தரவுகளை வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் நல்ல திட்டம் அல்லது புதிய யோசனை இருந்தால் செயற்கை நுண்ணறிவு மூலமாக அதனைப் பெரிய அள வில், பொருள் செலவு செய்யாமல் உங்களால் சோதனை செய்து பார்க்க முடியும். மருத்துவத் துறையில் மருத்து வர் இல்லாமல் செயற்கை நுண்ண றிவு எப்படி பயன்படும், செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் போலவே செயல்பட நினைக்கிறது. அதே நேரத் தில் அது மனிதர்களை மிரட்டுகிறதா என்பன போன்ற பல கேள்விகளுக் கும் நாம் பதில் தேட வேண்டி யுள்ளது. தற்போது உள்ள கல்வித் துறையிலும், வேலைகளிலும் செயற்கை நுண்ணறிவு முழுமை யான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் தொடர்ந்து உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங் களை விட, அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றங்கள் அதிக அளவில் நடை பெறும்” என்றார்.