ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையின் புற்றுநோய் துறை தலைவரும் பாஜக பிரமுகரும், ஏபிவிபியின் முன்னால் அகில இந்திய துணைத் தலைவராக இருந்தவரு மான சுப்பையா சண்முகம் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோக்கள் வெளிவந்துள்ளன. செவிலியர்கள் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்த சுப்பையா சண்முகம் அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது. குறித்த புகாரையும், ஆதாரங்களையும் ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள ‘விசாகா’ குழுவிடம் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று உள்ளது. இந்நிலையில் செவிலியர்களிடம் மிக மோச மாக அத்துமீறலில் ஈடுபட்ட சுப்பையா சண்முகம் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சமூகத்தில் மிகுந்த மரியாதைக் குரிய பொறுப்பு வகிக்கும் ஒரு அரசு மருத்துவர், நோயாளிகளின் உயிர்காக்க இரவு பகல் பாராது மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களிடம் மோசமான வன்முறையில் ஈடுபட்டதை சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏற்கனவே இதே சுப்பையா சண்முகம்தான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையில் மூதாட்டியின் வீட்டிற்கு முன் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த பின்னணியில் அடுத்தடுத்து இது போன்று சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே சுப்பையா சண்முகத்தை தமிழக காவல் துறை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள் கிறோம்.
அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...