tamilnadu

புலம் பெயர்ந்து வருபவர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் தீவிரம்

சின்னாளப்பட்டி, மே 14- கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்த தொழிலாளர்களை அந் தந்த மாநில அரசுகள் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி கொண்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்ட திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அவர்கள் எந்த ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் எனப் பிரித்து ஒன்றியத்தில் உள்ள ஒரு அலு வலக்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதனொரு பகுதியாக ஆத்தூர் ஒன்றி யத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அவர்களை சின்னா ளப்பட்டி அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதியில் தங்க வைப்ப தற்காக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  இதுகுறித்து ஆணையாளர் ஜெயச் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, வெளி மாநிலத்தில் இருந்து வருப வர்கள் ரயில் மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்து விடுகின்றனர். பின்னர் அவர்கள் எந்த ஊரை சேர்ந்த வர்கள் என பட்டியலிட்டு அவர்களை தனி மைப்படுத்தி மருத்துவ குழுவினரால் சோதனை செய்து பின்னர் 7 நாட்கள் கழித்து தொற்று உறுதியானால் கரூர் அரசு மருத்துவமனைக்கும் தொற்று இல்லை யென்றால் அவரவர் ஊருக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.  அதனால் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி யை தேர்ந்தெடுத்து புலம் பெயர்ந்தவர் கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்ய உள்ளோம் என்றார்.