கண்ணூர், ஏப்.5- கடந்த சில மாதங்களுக்கு முன்பே சிபிஎம் அகில இந்திய மாநாட்டுக்கான விளம்பரங்கள் கண்ணூரின் சுவர்களை அலங்க ரித்தன. கிராம நகர வேறுபாடின்றி ஒவ்வொரு பகுதிகளும் செங் கொடிகளால் நிரம்பின. கட்சி மாநாட்டின் பகுதியாக உருவாக் கப்பட்ட வரலாற்றுச் சித்திரக் காட்சி கள், சர்வதேச புத்தகக் காட்சி களைக் காண மக்கள் குவிந்து வரு கிறார்கள். 20க்கும் மேற்பட்ட இடங் களில் நடந்த கருத்தரங்கங்கள், இளைஞர் சந்திப்பு, மகளிர் சட்ட மன்றம் போன்றவை மக்கள் பங் கேற்பால் கவனம் பெற்றன. ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்ற செங் கொடி தினம் வரலாறு படைத்தது. மெகா குவிஸ், விளையாட்டு போன் றவற்றில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. கட்சி மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளுக்கு மறைந்த தலைவர்களின் பெயர் கள் சூட்டப்பட்டுள்ளன.
பிரதிநிதி கள் மாநாடு நடக்கும் பகுதிக்கு இ.கே.நாயனார் நகர், பொது மாநாடு நடக்கும் பகுதிக்கு ஏ.கே.ஜி.நகர், கருத்தரங்குகள் சி.எச்.கணாரன் நகர், வரலாற்றுக் காட்சிகள் இடம்பெற்றுள்ள பகு திக்கு கே.வரதராஜன் நகர் என பெயர் சூட்டப்பட்டது. புத்தகக் காட்சி நிருபம்சென் நகரிலும், ஊடக மையம் சடையன் கோவிந் தன் நகரிலும் நடைபெறும். செவ்வாயன்று (ஏப்.5) மாலை 5 மணிக்கு பொது மாநாட்டு நகரில் முதல்வரும் வரவேற்புக்குழு தலைவருமான பினராயி விஜ யன் கொடி ஏற்றுகிறார். இ.கே.நாயனார் அகாடமி அரங்கில் பிரதிநிதிகள் மாநாடு. பொது மாநாட்டில் ஏற்ற வேண்டிய கொடி மரம் கையூரில் இருந்தும் கொடி வயலாரில் இருந்தும் பயணமாக கொண்டு வரப்படுகின்றன.
மத்தியக்குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி தலைவராகவும், மாநிலக்குழு உறுப்பினர் கே.பி.சதீஸ் சந்திரன் மேலாளராகவும் உள்ள கொடிமர பயணம் ஏப்ரல் 5 காலை 9 மணிக்கு மத்தியக்குழு உறுப்பினர் பி.கருணாகரன் துவக்கி வைத்தார். மாநில செயற் குழு உறுப்பினர் எம்.சுவராஜ் தலைமையில் மாநிலக்குழு உறுப் பினர் சி.வி.சந்திரபாபு மேலாள ராக கொண்ட கொடி பயணம் ஏப்ரல் 5 அன்று மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. முக்கியமான பகுதிகளில் பயணக்குழுவின ருக்கு வரவேற்பு அளிக்கப்பட் டது. 1939 இல் கேரளத்தில் கம்யூ னிஸ்ட் கட்சி வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையல் ரக சிய மாநாடு பினராயியில் உள்ள பாறப்புறம்பில் நடந்தது. 80 ஆண்டு களுக்குப் பிறகு வரலாற்றில் முதல் முறையாக கட்சியின் அகில இந் திய மாநாடு கண்ணூரில் நடை பெறுகையில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.