தூத்துக்குடி, ஜூன் 16- அரசு பொதுத்தேர்வில் மாநில அள வில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் 47 குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி அறி ஞர் அண்ணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணி யாளர்களின் குரல் மாத இதழ் சார்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி மாந கராட்சி பணியாளர்களின் குழந்தை களுக்கான பரிசளிப்பு விழா சனி யன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பாக தேர்வு பெற்ற நக ராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் 47 குழந்தைகளுக்கு கேடயம், சான்றி தழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கி னார். விழாவில் மாநகராட்சி ஆணை யர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு நகராட்சி மாந கராட்சி பணியாளர்களின் குரல் மாத இதழ் பதிப்பாளர் ஆசிரியர் சீத்தா ராமன், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சண் முகம், சீனிஅஜ்மல்கான், கண்ணன், திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண் டல இயக்குநர் காளிமுத்து, தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர்கள் சங்க மாநில செயலாளர் முருகேசன், தூத் துக்குடி மாநகராட்சி உதவி ஆணை யாளர்(பொ) பிரின்ஸ் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.