துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமனம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 40 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிய மனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு தகுதி காண் பருவம் நிறை வேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, முன்னாள் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் 2024 நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். இதையடுத்து, நில அறிவியல் துறைப் பேராசி ரியர் க.சங்கர் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்கப் பட்டு, தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வது தொடர்பாக ஆட்சிக் குழுக் கூட்டம் சென்னையில் ஜன.20 அன்று நடைபெற்றது. இதில், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்களாக தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வே. ராஜாராமன் (ஒருங்கிணைப்பவர்), ஆட்சிக் குழு உறுப்பி னர்களான முனைவர் சி.அமுதா (மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்), முனைவர் வீ. அரசு (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முன்னாள் தலைவர்), பெ.பாரதஜோதி (தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவர்), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள் ஆகியோர் நிய மிக்கப்பட்டனர். இதற்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை, தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகச் செயல்படுவர்.