tamilnadu

விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு

சென்னை, டிச.21- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை விசாரணை குழுவில் அமைப்ப தாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஏற்கெனவே விசா ரணைக்காக ஆஜரான சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை அல்லது மறு விசாரணையை அப்பல்லோ தரப்பு கூறினால் அதை மனுவாக தாக்கல் செய்து விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஆறுமுகசாமி விசா ரணை ஆணையம் நடுநிலையோடும், துல்லியமாகவும், முறைப்படி யும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே முன்பை போல தொடர்ந்து எங்களது முழு ஒத்துழைப்பை கொடுப் போம். விசாரணை ஆணையத்திடம் இதுவரை அப்போலோ மருத்து வர்கள் 56 பேர், 22 துணை மருத்துவர்கள் ஆஜராகியுள்ளனர். ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான 6 ஆயிரம் பக்க மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று அதில்  கூறப்பட்டுள்ளது.