பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் வேலைக்கேற்ப ஊதியம், முறையான இழப்பீடு வழங்கக் கோரி சிஐடியு தலைமையில் அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இயக்குனரக அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தால் கவுகாத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.