சென்னை, அக்.27- சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்க ரின் முழு உருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (அக்.27) திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த சிலையை அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவள வன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மே 22 அன்று அச்சிலையை நிறுவதற்கான இடத்தை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, க.பொன் முடி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.