அகில இந்திய வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 26- தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த வாயிற் கூட்டம், தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமையில் வியாழன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சீனிவாசன், சேக்கிழார், நரசிம்மன், தியாகராஜன், ஆலயமணி, பழனியாண்டி, நடராஜன், இளங்கோ ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் சிவசெல்வன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.