சென்னை, மார்ச் 21- குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கடுமையாக சாடியுள்ளார். விழுப்புரம் வேட்பாளர் அறி முக கூட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான், “10 ஆண்டுகால மாக கூட்டணிக் கட்சிகளையும், எதிர்க் கட்சி களையும் உடைத்த பாஜக, அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. தேசியமும், தமிழும் என கூறி கூட்டணி அமைத்துள்ளவர்களுக்கு தங்களின் குடும்பமும், பணமுமே பிரதானம். தங்கள் குடும் பத்தை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்” என்று பாமகவை மறை முகமாக சாடியுள்ளார். இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனும் பாமகவை கடுமையாக விமர் சித்துள்ளார். நாகை அதிமுக மாவட்ட அலுவல கத்தில் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் “தற்போது பாஜக, பாமக அமைத் துள்ள கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. இட ஒதுக்கீடு என்றால் அறவே வேண்டாம் என்கிற கட்சியான பாஜகவுடன் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார். ஊழல் வழக்கில் இருந்து தப் பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.