மதுரை, நவ.16- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை கிழக்கு ஒன்றிய கோரிக்கை 10 ஆவது மாநாடு யா.நரசிங்கத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் பி.அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி. உமாமகேஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றிய செயலாளர் கே. மச்ச ராஜா வேலை அறிக்கையும் பொருளாளர் எம்.கார்த்திகை சாமி வரவு- செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு ஒன்றியச் செயலாளர் ஆர். மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் சொ.பாண்டி யன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். ஒன்றியத் தலைவராக சோனை, ஒன்றியச் செயலாள ராக பி.அழகர்சாமி, பொருளாளராக கார்த்திகைசாமி, துணைச் செயலாளராக கே.மச்சராஜா, துணைத் தலைவ ராக பி.அம்பிகா ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கிழக்கு ஒன்றியத்தில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.