கள்ளக்குறிச்சி,ஜன.2- கள்ளக்குறிச்சி அருகே எடுத்த வாய்நத்தம் கிராம பட்டியலின மக்கள் 3 தலைமுறைகளுக்கு பிறகு, காவல்துறை மற்றும் அரசு அதிகாரி களின் பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்த வாய்நத்தம் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் 200 ஆண்டுகால பழமையானது. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், தலித் ஊராட்சி மன்றத் தலைவரையும் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து வந்தனர். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து போராடியது. பிறகு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தலித் பெண் ஊராட்சிமன்றத் தலைவர் கொடி யேற்றும் பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, வரதராஜ பெருமாள் கோவிலுக்குள்ளும் அனு மதிக்க வேண்டும்
என்று தலித் மக்கள் கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் எழுந்த பிரச்சனையால், சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவின் அடிப்படையில், இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்றதைத்தொடர்ந்து திங்க ளன்று (ஜன.2) அந்த மக்களை ஒன்றிணைத்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிறகு, தலித் மக்களை கிராமத்தின் மையப் பகுதியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பிறகு மக்களை பாதுகாப்பாக அவர்க ளது பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பல தலைமுறைகளாக கோயி லுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியுடன் முதன்முறையாக கோயிலுக்கு செல்வதற்கு துணையாக இருந்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை யினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.