திருநெல்வேலி, மே 16- நெல்லை முன்னீர்பள்ளம் பகுதி யில் உள்ள கல்குவாரி விபத்து தொடர்பாக அமைச்சர் ராஜகண் ணப்பன் திங்கட்கிழமை வண்ணார் பேட்டை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: கல்குவாரி விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்டுள்ளோம். அதில் ஒருவர் இறந்து விட்டார். காயமடைந்த 2 பேருக்கும் முதலமைச்சர் உத்தர வுப்படி தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குவாரியில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. குவாரி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. குவாரியில் விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார், பேட்டியின் போது சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வருவாய்த்துறை முதன்மை செய லாளர் குமார்ஜெயந்த், கனிமம் மற் றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர் மல்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ ஆகியோர் உட னிருந்தனர்.