ஈரோடு, அக்.19- ஈரோட்டில் நிலம் கையகப்படுத்தல் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரும் சனிக்கிழமை விடு தலை செய்யப்பட்டனர். அவர்களை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வாழ்த்தி கௌர வித்தார். ஒன்றிய அரசு விவசாய நிலங்களை ‘தந்தி’ சட்டத்தின்படி உயர்மின் கோபுரங்களுக்காக கையகப்படுத்தி யது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயி கள் பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டனர். ஈரோட்டில் ‘தந்தி’ சட்ட நகல் எரிப்பு போராட்டம் கடந்த 18.09.2019 இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு ஈரோடு ஜெஎம்3 நீதிமன்றத்தில் நடை பெற்றது. இதன் தீர்ப்பு சனிக்கிழமை (அக்.19) வெளியானது. அதில், அனை வரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையானவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட உயர்அழுத்த மின் கோபுர எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நடை பெற்றது. அப்போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் மீது ஈரோடு மற்றும் நாமக்கல் காவல்துறையினர் பொய் வழக்கு போட்டனர். இவ்வழக்கு கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. ஈரோட்டில் ஏ.எம்.முனுசாமி தலை மையிலான 43 விவசாயிகள் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் மாஜிஸ்ட்ரேட் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தார். அதில், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வாழ்த்து மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் ப்ரவீன் ஆகியோர் திறம்பட வாதிட்டு விடுதலையைப் பெற்றுத் தந்தனர் என்றார். பின்பு வழக்கறிஞர்கள் மற்றும் விடுதலை யான விவசாயிகளை சண்முகம் வாழ்த்தி கவுரவித்தார்.