திருச்சிராப்பள்ளி, மே 9- திருச்சிராப்பள்ளி புதூ ரில் உள்ள பார்வையற்ற பெண்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் பிளஸ்-2 தேர்வில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பார்வை யற்றோருக்காக மாநிலத்தில் இயங்கி வரும் மூன்று பள்ளிகளில் ஒன்று இப்பள்ளி. கடந்த ஐந்தாண்டு களாக பிளஸ்- 2 தேர்வில் தொடர்ந்து சாதித்து வரு கிறது. இந்தாண்டு தேர்வெ ழுதிய 17 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தலைமையாசிரி யர் வி.சுப்பிரமணியன் கூறு கையில், பள்ளி மாணவர் களுக்கு தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மாண வர்கள் அரசு வழங்கும் கணி னிகள், பிரெய்லி மற்றும் ஆடியோ ரெக்கார்டர்க ளைப் பயன்படுத்துகின்ற னர். ஆசிரியர்களும் சிறப் பான முறையில் அவர்களுக் குக் கற்றுக்கொடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை வழங்கும் தொழில் வழி காட்டுதல் திட்டத்தில் அனைத்து மாணவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் சென்னையில் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க வும் திட்டமிட்டுள்ளனர்” என்றார்.
தேர்வெழுதிய 17 மாண வர்களில் ஆர்.ஆர்த்தி 600க்கு 549 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலி டம் பெற்றுள்ளார். புவியியல் பாடத்தில் 100-க்கு 100 பெற் றுள்ளார். ஆர்த்தி தனது வெற்றியை தனது பெற் றோர் மற்றும் ஆசிரியர் களுக்கு அர்ப்பணித்தார். அவர் கூறுகையில் “எனக்கு மிகவும் ஆதரவாக பெற்றோ ரும் ஆசிரியர்களும் இருந்த னர். எந்த அழுத்தமும் இல் லாமல் படிக்க எனக்கு உத வினார்கள்” என்றார். பி.ஏ. எல்.எல்.பி. படிக்க விரும்புவ தாகக் தெரிவித்தார். 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத் தைப் பெற்றுள்ள ஆர். கீர்த்தனா, ஆசிரியர்கள் நன் றாகக் கற்றுக் கொடுத்தனர். கற்றறிந்தவற்றை குழுவாக விவாதிப்போம் என்றார். குழு விவாதம் எனது வெற் றிக்குக் காரணம் என்கிறார். கீர்த்தனா பி.ஏ. இலக்கியம் (ஆங்கிலம்) படிக்க விரும்பு வதாகக் கூறினார். ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 95 மாண விகள் படிக்கும் இப்பள்ளி யில் 23 பணியிடங்கள் காலி யாக உள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆறு பாடங்களைக் கற்றுக் கொடுக்க மூன்று ஆசிரி யர்கள் மட்டுமே உள்ள னர். மேலும் போதுமான ஆசி ரியர்களை நியமிக்க வேண்டு மென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டில் கூடு தல் ஆசிரியர்கள் கிடைப்பார் கள் என்று நம்பிக்கையோடு உள்ளனர் சக ஆசிரியர்கள்.