மகாத்மா காந்தி பிறந்த நாளான திங்களன்று (அக்.2) காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து ‘மதநல்லிணக்க உறுதிமொழி’ ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் இதயதுல்லா (காங்கிரஸ்), ஷேக் முகமது அலி (மமக), இரா.செல்வம் (விசிக), எஸ்.குமார் (சென்னை மக்கள் ஒற்றுமை மேடை), பத்திரிகையாளர் ெஜனிபர் வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.