வரி உயர்வுகளைக் கைவிடுக! சிபிஎம் பிரச்சாரத்தில் வலியுறுத்தல்
மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், சொத்து வரி, வீட்டு வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை தமிழக அரசு கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. அதனொரு பகுதியாக ஞாயிறன்று மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன்(மதுரை மாநகர்), அ.குருசாமி (விருதுநகர்), எம்.ராமச்சந்திரன் (தேனி) உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.