மலையாள இலக்கியத்தின் முன்னணிப் படைப்பாளியும் பத்திரிகையாளருமான கே.ஆர். மீரா எழுதியுள்ள குறுநாவ லான ‘மீரா சாது’, காதலின் பல்வேறு பரி மாணங்களை ஆழமாக ஆராயும் ஓர் அற்புதப் படைப்பு. காதலின் தீவிரத் தையும் அதன் விளைவுகளையும் மனித மனத்தின் சிக்கலான உணர்வுகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறது இந்த நாவல். இதனைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்திருக்கிறார் மோ. செந்தில் குமார். அவரது சிறப்பான மொழிபெயர்ப் பில், தமிழ் வாசகர்கள் மீரா சாதுவின் உலகில் மூழ்கி ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தைப் பெறலாம். அதிகப்படியான காதலும், அதிகப் படியான கோபமும் ஒருவரை தன்னிலை மறக்கச் செய்து, வாழ்க்கையின் பாதை யை மாற்றிவிடக்கூடும் என்பதற்கான உதாரணம் துளசியின் வாழ்க்கை. ஐஐடி பட்டதாரி துளசி. பத்திரிகைத் துறை யில் புகழ்பெற்றவன் மாதவன். அறி வார்ந்தவர்களாக இருந்தாலும், உணர்ச் சிகளைக் கட்டுப்படுத்தத் தவறி, முடி வில்லா துன்பக்கடலில் தத்தளிக்கின்றனர்.
இலக்கியங்களில் பெண்களின் சொர்க்கமாகச் சித்தரிக்கப்படும் பிருந்தா வனத்தின் இன்னொரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்கிறார் நாவலாசிரியர். துளசியின் வாழ்க்கை வழியாக, பெண் கள் எதிர்கொள்ளும் உண்மைத் துயரங் கள், சமூக அழுத்தங்கள், பலவீனங்கள் ஆகியவற்றை நுட்பமாக வெளிப்படுத்து கிறார். பிருந்தாவனம் என்ற சொல், நம் கற்பனை உலகச் சொர்க்கத்தையல்ல, விதவைகள் தங்களது எஞ்சிய ஆயு ளைக் கழிக்கும் துயரமிகு இடத்தைக் குறிப்பதாகிறது. நறுமணமிக்க பூக்களும், மென்மை யான இசையும் காணாமல் போய், துர் நாற்றமும் கூக்குரல்களும் கெஞ்சல்க ளும் அழுகைகளும் நம் காதுகளைப் பிளக்கின்றன. விதவையர் வந்து சேரும் இடமான பிருந்தாவனத்தின் உண்மைக் காட்சியை நம் முன் கொண்டு வருகிற நாவல், இத்தகைய சூழல்கள் பெண்க ளின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின் றன என்று சிந்திக்க வைக்கிறது. கணவன் உயிரோடு இருக்கிறபோதே துளசி வித வைக் கோலம் பூண்டு இங்கே வருவது அவன் செத்துவிட்டான் எனும் அறிவிப்பு தான். இந்த நாவல், இந்தியச் சமுதாயத் தின் முன்னேற்றத்திற்கு இன்னும் கடந்தாக வேண்டிய பல பகுதிகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. விதவைகள் பற்றிய சமூகத்தின் பார்வை, பெண் சுதந்தி ரம், சமூக நீதி போன்றவை தொடர்பாக முக்கியமான கேள்விகளை நாவல் எழுப்புகிறது. காதலின் முகமூடியில் மறைந்தி ருக்கும் பொறாமை, கோபம், துரோகம் போன்ற உணர்ச்சிகள், இருவரின் உற வைச் சிதைத்து, இறுதியில் வாழ்க்கை யையே நரகமாக்குகின்றன. ஒரு காதல் கதையாக மட்டுமின்றி, ஒரு சமூக விமர்சனமாகவும் வந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்தரிக்கும் இந்த நாவல், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வித வைகளின் வாழ்க்கையைக் கண்ணாடி யாகப் பிரதிபலிக்கிறது. துளசியின் கதை வழியாக, பெண்கள் எவ்வாறு சமூகத்தின் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என்று உணர்த்தப்படுகிறது. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் சிக்கித் தவிக்கும் பெண்களின் போராட்டத்தை உள்ளபடி சித்தரிக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்திற்கான அழைப்பை விடுக்கிறது நாவல். துளசியின் கதை காதல், துக்கம், சமூக விமர்சனம் ஆகியவற்றின் சரி விகிதக் கலவையாக அற்புதமானதொரு வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.
மீரா சாது நாவல்
மூலப் படைப்பு மலையாளத்தில்: கே.ஆர். மீரா
தமிழில்: மோ. செந்தில் குமார்
விலை: ரூ.150
வெளியீடு: எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com தொலைபேசி: +91 4249 226012,
கைப்பேசி: 9894875084, 9942511302