tamilnadu

img

ஏழு மாதங்களில் 9,879 பிரசவங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை....

மதுரை:
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறையில் ஏப்ரல் 2020 முதல் அக்டோபர்2020 வரை ஏழு மாதங்களில் 9,879 பிரசவங்கள் நடந்துள்ளது சென்ற வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 8,408 பிரசவங்கள்மட்டுமே நடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது மேலும் 2.07.2020 மற்றும் 22.10.2020 தேதிகளில் ஒரே நாளில் 66 சிக்கலான பிரசவங்கள் தாய்- சிசு மரணமின்றி பார்க்கப் பட்டுள்ளது தென் தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து சிக்கலான கர்ப்பிணி பெண்கள் மேல் சிகிச் சைக்காக பரிந்துரைக்கப்படும் உயர் சிறப்பு சிகிச்சை மையமாகஅரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறை திகழ்கிறது என்று மகப்பேறு துறைத் தலைவர் என்.சுமதி கூறினார்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதன்மையர் சங்குமணி, “மகப்பேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், துணைபேராசிரியர்கள், பட்ட மேற் படிப்பு மாணவிகளை” பாராட்டினார்.