tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 நாளில் 50 ஆயிரம் பேர் பயன்

சென்னை: ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில்  கொண்டு வரப்பட்ட திட்டம் “முதல்வர் மருந்தகம்”. இந்த திட்டம்  தொடங்கிய 8 நாட்களில் ரூ.27 லட்சத்திற்கு மேல் மருந்து கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் 7,68,766 ரூபாய் மக்களுக்கு சேமிப்பு கிடைத்துள்ளது. மேலும், 50,053 பேர் பயனடைந்துள்ளனர் என்று அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு வைகோ கண்டனம்

சென்னை: அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி யில் சமூகவியல் துறை சார்பில் நடக்கும் ‘இண்டஸ் நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான  பார்வைகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி  வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, எப்போதும் போல் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளந்து இருக்கிறார். திரிபுவாதத்தை முன் வைத்திருக்கிறார். மேலும்  ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று தொடர்ந்து  பிதற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தங்கம் கிடைக்கும்?

சென்னை: தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விருது நகர், இராஜபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் பூமிக்கு  அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள தாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல்  தெரிவித்திருக்கிறார். மேலும், பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் தமிழ்நாட்டில் இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ள தாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எந்த சாதிக்கும் சொந்தமல்ல கோவில்!

சென்னை: நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 3 கோவில்களில் இருந்து காளியம்மன் கோயிலை  தனியாக பிரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதை விசாரித்த  நீதிமன்றம், கோவில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில்களை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது  மத நடைமுறையும் அல்ல என்றும், பெரும்பாலான பொது  கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. சாதிப் பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள், மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை  வெளிப்படுத்துகிறார்கள் என்றும்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

மீனவர்கள் கடத்தல்காரர்களா?

சென்னை: “தமிழ்நாடு மீனவர்களை கடத்தல்காரர்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தலில் வாக்கு கேட்டு  செல்லும் போது மீனவர்கள் அண்ணாமலைக்கு பாடம்  புகட்டுவார்கள்” என்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

ராமஜெயம் வழக்கில் அதிகாரி மாற்றம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரி களை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் திருச்சி  சரக டி.ஐ.ஜி, தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக  நியமித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹஜ் தலைவர் நெகிழ்ச்சி

சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே ஹஜ் யாத்திரை செல்லும் புனிதப் பயணிகள் பயன்பாட்டிற்காக ரூ. 65 கோடியில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும் என அறிவித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர், “தமிழ் நாடு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள 42 கோடி இஸ்லாமியர்களும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

தவெக பங்கேற்பு!

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக புதன் கிழமை நடைபெறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையி லான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம்  பங்கேற்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்கிறார்.