சீர்காழி, நவ.6 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே எலத்தூர் கிராமத்தில் பிரதான தெற்குராஜன் பாசன வாய்க்காலிலிருந்து முக்கிய கிளை வாய்க்காலாக குயவன் வாய்க்கால் என்ற வாய்க்கால் பிரிகிறது. அதி லிருந்து பெரிய வாய்க்கால், கோழி பத்து வாய்க்கால், மானிய வாய்க்கால், ராமன் வாய்க்கால், தாமரைகுல வாய்க் கால், தோப்புதெரு வாய்க்கால், மேலேரி மற்றும் கீழேரி வாய்க்கால், பள்ளன்வாய்க்கால், படுகை வாய்க் கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இந்த அனைத்து கிளை வாய்க் கால்களுக்கும் குயவன் வாய்க்காலே முக்கிய வாய்க்காலாக இருந்து பாச னத்துக்கு நீர் கொடுத்து வருகிறது. நிலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வாய்க்காலாகவும் இந்த வாய்க்கால்கள் இருந்து வரு கின்றன. இந்த குயவன் வாய்க்கால் வடரங்கம், சென்னியநல்லூர், பூங்குடி, மாதிரிவேளூர், படுகை, பட்டியமேடு, கீரங்குடி, கொன்ன காட்டுபடுகை உள்ளிட்ட கிராமங் களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதியை அளித்துவிட்டு, பின்னர் கீரங்குடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வடிகால் வாய்க்காலாக சென்று கலக்கிறது. இந்த குயவன் வாய்க்கால் கடந்த மூன்று வருடங்களாக தூர்வாரப்படா மல் உள்ளதால் வாய்க்கால் தூர்ந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் இந்த வாய்க்கால் வழியே வழக்கமாக செல்லும் தண்ணீரும் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்களுக்கும் தண்ணீர் சென்று சேர முடியாத நிலைஉள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், இப்பகுதியில் உள்ள சுமார் 5000 ஏக்கர் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த பயிர்கள் சேத மடைந்துள்ளன. தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக நெற்பயிர் தண்ணீரில் இருப்பதால், அவை அழுகும் நிலை யில் உள்ளன. இந்த வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டிருந்தால், விளைநிலங்களில் தேங்கும் மழை நீர் எளிதில் வெளியேறி வடிவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தற்போதுள்ள சூழலில் தேங்கிய மழைநீர் இதுவரை வெளியேறவில்லை. தொடர் வெள்ளப்பெருக்கால், கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில், குறிப்பாக கிழக்கு பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கொள்ளிடம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நிலங்களில் மழைநீர் புகுந்து 5000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகியுள்ளன. இது விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அழுகிய நெற்பயிருக்கு பதிலாக மீண்டும் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்து ள்ள நெற்பயிரை நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கொள்ளிடம் பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.