பட்டுக்கோட்டை மெட்ரிக் பள்ளியில் 36 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
பாபநாசம் பட்டுக்கோட்டை மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் 36 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பாபநாசம் காவல் எஸ்.ஐ ஜெகஜீவன் திருப்பாலைத் துறையில் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். விழாவிற்கு பள்ளிச் செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். நிதிச் செயலர் பொம்மி முன்னிலை வகித்தார். ஓட்டம், கபடி, குண்டு, வட்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவர்களின் யோகா, பிரமிடு நிகழ்ச்சி, மாணவிகளின் புடவை நடனம் நடைபெற்றது. இதில், பள்ளி அறங்காவலர்கள் திருஞானசம்பந்தம், ஜெயராமன், முதல்வர் தீபக், துணை முதல்வர் சித்ரா உட்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.