tamilnadu

img

அதிகாரிகள் துணையுடன் கண்மாயை ஆக்கிரமிக்கும் கல்குவாரி நிறுவனங்கள் - ராபர்ட் (நீர்நிலை பாதுகாப்பு போராட்டக்குழு)

காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு 
அரசு தலையிட 3 கிராம மக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை, ஏப்.16- நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தனியார் கல்  குவாரி நிறுவனங்கள் கண்மாய் மற்றும் நீர் வரத்து ஓடைகளை ஆக்கிரமித்து சாலை அமைத்து கனரக வாகனங்களை இயக்கி வருகின்றன. பல முறை புகார் அளித்தும்  இத னைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது மூன்று கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம்  புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிக்குண்டு  கிராமம். இந்த கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பள வில் கண்மாய் இருக்கிறது. பருவ காலங்களில் இந்த கண்மாய்ப் பாசனத்தை நம்பியே கோணப்பனயேந்தல் மற்றும் பன்னிக்குண்டு விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் விவ சாயம் செய்து வருகின்றனர். இதனைச் சீர் குலைத்திடும் வகையில் விஷ்ணுசூர்யா என்ற  கல்குவாரி நிறுவனம், கண்மாய் உள்பகுதி, கரைப்பகுதி மற்றும்  வடபுறத்தில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்து சாலை அமைத்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை இயக்கி வந்தனர். இதனால் அப்பகுதி விவசா யம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மண் மற்றும்  தூசு படிவதால் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்ச லும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் உத்தரவு

இதனைக் கண்டித்து இப்பகுதி கிராம மக் கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அப்போ தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை  உயர்நீதிமன்றம், கண்மாய் உட்பகுதி மற்றும்  கரை பகுதியை ஆக்கிரமித்தும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் தூர்வாரப்பட்ட நீர்  வரத்து ஓடையை  மூடி அதன் மேல் சரளை  கற்களைக் கொண்டு சாலை அமைத்திருப்பதை யும் விசாரணையில் உறுதிப் படுத்தியது. கன ரக வாகனங்கள் செல்வது கண்மாயின் தன்மை யைச் சீர்குலைக்கும். ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டம் நடத்த சமயத்திலிருந்த நிலையையே பராமரிக்க  வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித் தது. இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியரும் நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது எனத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.  ஆனால், அதன் பின்னரும் அதிகாரிகளின் மறைமுக ஆசியுடன் கல்குவாரி நிறுவனங்கள் மீண்டும் ஆக்கிரமித்த வழியாக வாகனங்களை இயக்கினர். இந்நிலையில், பன்னிக்குண்டு, கோணப்பனயேந்தல், புலியூரான் கிராமத்து மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்  தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே விஷ்ணுசூர்யா கல்குவாரி நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனங்களை இயக்குவதை நிறுத்தியது. 

மீண்டும் நீதிமன்ற உத்தரவு மீறல்

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக,  முருகன் கல்குவாரி நிறுவனம் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி, பன்னிக்குண்டு கண்மாய்  கரையில் சாலை அமைத்து கனரக வாக னங்களை இயக்கி வருகிறது. இதனை தட்டிக்கேட் கும் விவசாயிகள் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்குப் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. 

அதிரும் வீடுகள்

இதே போல் சாஸ்திரி என்ற கல்குவாரி நிறு வனம் அரசின் எந்த விதிமுறைகளையும் பின் பற்றாமல், ரயில் பாதையின் 30 மீட்டருக்குள் கல்குவாரி தோண்டி வருகின்றனர். புலியூரான் கண்மாய் கரை மற்றும் கண்மாயின் உட்புறங் களை ஆக்கிரமித்து சாலை அமைத்து அதில் கன ரக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.  இதுகுறித்து நீர்நிலைகளைப் பாதுகாக்கும்  போராட்டக்குழுவின் ராபர்ட் கூறுகையில், ‘‘நீதி மன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு பகுதியில் கனரக வாகனத்தை இயக்கி அராஜகத்தில் ஈடு படும் முருகன் குவாரி நிறுவனத்தின் மீது பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் புகார் அளிக்கும் எங்களைத்தான் மிரட்டுகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது எங்கள் ஊர் கண்மாயையும் சாஸ்திரி என்ற கல்குவாரி நிறு வனம் ஆக்கிரமித்து சாலை அமைத்து கனரக வாகனங்களைச் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கி வருகிறது.  முருகன் மற்றும் சாஸ்திரி கல்குவாரியில் வைக்கப்படும் வெடியால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் அதிர்கின்றன. இதனால் பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்ற னர். இதில், தமிழக முதல்வர் நேரடியாகத் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்  கள் மூன்று கிராம மக்களின் கோரிக்கை’’ என்றார். 

அப்பகுதி விவசாயி மகாலிங்கம் கூறுகை யில், ‘‘மொதல்ல கண்மாய்க்குள்ள ரோடு போட்  டாங்க. ரெண்டாவது கண்மாயின் மடை பகுதியில் தண்ணீர் ஏறாத அளவிற்கு ஆழமாக தோண்டி கரை மேலேயே ரோட போட்டாங்க. இவ்வளவு நடக்கிற வரையும் ஒரு அதிகாரியும் அவங்கள தடுக்கல. நாங்க தடுக்கப் போனா ரவுடிகளை வச்சு மிரட்டுராங்க. மாவட்ட அமைச்சர் பெய ரைச் சொல்லியும் மிரட்டுராங்க. நூத்துக்கணக் கான பெரிய லாரி போயிகிட்டும், வந்துக்கிட்டும் இருக்கு. கரையோட நிலை என்ன ஆகும். எங்கள எப்படியாவது இந்த அரசுதான் காப்பாத்தனும்’’ என்றார்.  இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யகுமாரியிடம் கேட்ட போது, ‘‘முருகன் கல் குவாரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்து விட்டேன். வழக்கில் நான் கடைசியாகத்தான் சேர்க்கப்பட்டிருக்கிறேன். இதற்கு மேல் நான்  என்ன செய்ய முடியும்? வழக்கில் முதன்மையாக  இருக்கும் கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார்தான் மேல்  நடவடிக்கை எடுக்கனும்’’ என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை வட்டாட்சியர்  அறிவழகனிடம் கேட்ட போது, ‘‘ஆட்சியர் ஜிபிஎஸ்  மூலம், கரையை எவ்வளவு அகலப்படுத்தியிருக் கின்றனர் எனக் கணக்கிட்டு அறிக்கை கொடுக்கச்  சொல்லியிருக்கிறார். அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார். இதில், தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து மூன்று  கிராம மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்  என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

நமது நிருபர்