tamilnadu

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 2900 பேர் விண்ணப்பம்

சென்னை,டிச.20- தமிழ்நாட்டிள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக் கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்அறிவித்தார். அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் 6958 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.)  1925 இடங்களும் உள்ளதாக அப்போது  குறிப்பிட்டார். அதன்படி மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளி யிட்டது. இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் நேற்று முதல் வழங்கப் பட்டு வருகிறது. விண்ணப்பங்களை ஜனவரி 7 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் தகுதியான மாண வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மருத்துவ  படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வருகிறார்கள். இதில் இது வரை 2900 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரி கூறினார். கல்லூரிக் கட்டணம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்ற விவரங்களுக்கு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப் பேடுகளை பார்த்து தெரிந்து அதற் கேற்ப விண்ணப்பிக் கலாம் என்றும் அதிகாரி தெரியபடுத்தி உள்ளார்.

கலந்தாய்வு நடைபெறும் போது நேரடி முறையாலேயே நடைபெறும் என்றும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம். கலந்தாய்வு அறையில் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 7.5 விழுக்காடு உள் இடஒதுக் கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள்  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் இருந்து நன்மதிப்பு சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் சான்றிதழில் முரண்பாடு இருந்தால் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்றும் வெளி மாநிலங்களில் படித்தவ ர்கள்,  வெளிமாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வர்கள் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.