சென்னை, ஆக.19- சென்னையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26 பேர் சிறை யில் அடைக்கப்பட்டனர். கொலை, திருட்டு, நகை பறிப்பு, சைபர் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடு கிறவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 468 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங் களில் ஈடுபட்ட 133 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாக 193 பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள் ளனர்.