சென்னை, பிப்.17- ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை மொத்தம் 25 லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்றும், இளைஞர்களின் நலனில் திமுக அரசு உறுதி யாக உள்ளது என்றும் இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள சிஎம்ஆர்எல் கட்டிடத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத் தின் (டிஎன்எஸ்டிசி) புதிய அலுவலகத்தை 8 கோடி செலவில் திறந்து வைத்து, சில மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமான ஆணைகளை வழங்கினார். தமிழகத்தில் கடந்த 33 மாதங்களில் இளை ஞர்கள் மற்றும் மாணவர் களின் நலனுக்காக திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று அப்போது அவர் குறிப்பிட்டார். சிறந்த பட்டதாரி திறமைக்கான திட்டத்தின் (SCOUT) கீழ் சிறந்த தேர்ச்சி பெற்ற 100 மாண வர்களுக்கு குறுகிய கால சிறப்புப் படிப்புகளை வழங் குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரிட்டிஷ் கவுன் சிலுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அமைச் சர் உதயநிதி மற்றும் தமிழ கத்துக்கான பிரிட்டிஷ் துணைத் தூதுவர் ஆலிவர் பால்ஹட்செட் ஆகியோர் முன்னிலையில் கையெழுத் தானது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் (தெற்கு) ஜனக புஷ்பநாதன் ஆகியோர் இதில் கையெ ழுத்திட்டனர்.