நாகர்கோவில், மார்ச் 6 - வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராக, சமூகநீதிக்கு வித்திட்ட தோள் சீலை போராட்டத்தின் 200ஆம் ஆண்டு நிறைவு விழா நாகர்கோவிலில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இன்றைய குமரி மாவட்டம் உள்ளி ட்ட அன்றைய தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வர்ணாசிரம அதர்மத்தால் - வதைக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய மகத்தானப் போராட்டம் தோள் சீலைப் போராட்டம். 1822 முதல்1859 வரை மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்தப் போராட்டமும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமின்றி சனாதன வர்ணா சிரம கட்டமைப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஆதிக்க சக்திகள் நடைமுறைப்படுத்திய மதவாத, சாதிய கொடுமைகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர் நடத்திய சமூகப் புரட்சி யும் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள வரலாற்றில் முத்திரைப் பதித்துள்ள எழுச்சிகள் ஆகும். இத்தகைய மாபெரும் எழுச்சி யின் 200ஆம் ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 6 திங்க ளன்று மாலை நாகர்கோவில் நாக ராஜா திடலில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இப்பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரை நிகழ்த்தினர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஏ.வி. பெல்லார்மின் தலைமையில் நடை பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் அய்யா வைகுண்டர் தலைமைப் பதி மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடி களார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். முன்னதாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிமுகவுரை நிகழ்த்தினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் வரவேற்புரையாற்றினார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.