tamilnadu

img

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமபேழைகள்

வந்தவாசி,  ஜூலை 9-  வந்தவாசி அருகே நடந்த அகழாய்வு பணியின் போது தமிழர் களின் பண்பாட்டை குறிக்கும் சுடுமண் ஈம பேழைகள் கண்டெடுக் கப்பட்டது.  இவை 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெருமக்கள் பயன்படுத்தியதுஎன்று ஆய்வில் தெரியவந்தது. திரு வண்ணாமலை மாவட்டம். வந்தவாசி தாலுகாகீழ் நமண்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமை யில் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது கிராமத்தில் உள்ள வடமேற்கு பகுதியில் 2,500 ஆண்டு களுக்கு முந்தைய பெருங் கற்கால இடுகாடுஇருப்பதும், இதில் 3 மீட்டர் விட்டம்முதல் 5 மீட்டர் விட்டம் வரை யிலான 200க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள்இருப்பது கண்டறியப் பட்டது.இந்த கல் வட்டங்களில் பெருங் கற்கால மனிதர்களின் ஈம பேழைகள் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இந்த பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.  

இதனைத் தொடர்ந்து தொல்லி யல் துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணி களை கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகமுதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குனர் ஜி.விக்டர் ஞான ராஜ், மைய பொறுப்பாளர்எம்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இந்த அக ழாய்வு பணிகள் கடந்த 3 மாதங் களாக நடைபெற்று வருகிறது. 14 தொழிலாளர்களை கொண்டு முதல் கட்டமாக இரண்டு வட்டங்க ளில் குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். பின்னர் படிப்படி யாக தற்பொழுது 11 இடங்களில் அக ழாய்வு பணிகள் நடந்து வருகின் றன. இதில் முதல் கட்டமாக 20க்கும் மேற்பட்ட ஈமபேழைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் சிவப்பு மற்றும் கருப்பு, சிவப்பு பானைகள்புதைத்து வைத்திருப்பது கண்டெடுக்கப் பட்டது. இந்த ஈமப்பேழைகள் சுமார் 2,500 ஆண்டுகளுக்குமுந்தையது இருக்கலாம் என கருதப்படுகிறது. சுடுமண்ணால் 12 கால்களுடன் தயாரி க்கப்பட்டுள்ள இந்த ஈம பேழைகள் தமிழர்களின் பண்பாட்டைகுறிக்கும் வகையில் உள்ளன. பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பின்னர் தான் இதில்வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் தெரியவரும் என தொல்லியல் துறையினர்தெரிவித்தனர். தொல்லி யல் துறையினர் அந்த பானை ஓடு களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த அக ழாய்வின்போது கிடைக்கபெற்ற பொருட்களின் மாதிரிகள்மாநில தொல்லியல் துறை இயக்குநரின் ஆய்வுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

;