சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மார்க் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாண வர்கள் சமீபத்தில் ஒரே நாளில் பல உலக சாதனைகளைப் படைத்து வரலாறு படைத்த னர். மூன்று தனித்துவமான பிரிவுகளில் அதன் சிறந்த செயல்திறன் மூலம் இந்தப் பள்ளி சாதனைப் புத்தகம், எலைட் உலக சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் பள்ளி மற்றும் தமிழன் சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் வெற்றிகரமாக நுழைந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் 12 மணி நேர தொடர்ச்சியான வாசிப்பில் மாண வர்கள் ஈடுபட்டனர். மாணவர்கள் வாசிப்புத் திறனை வெளிப்படுத்தி எழுத்தறிவு மற்றும் அறிவின் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தனர். அரை மணி நேரத்தில் 133 மனித பிரமிடு களை உருவாக்கினர். குழுவாக பணியாற்ற வேண்டிய அவசியத்தை இதன் மூலம் உணர்த்தினர். மேலும் 3 மணி நேர கணிதக் கருத்து விளக்கமும் நடை பெற்றது. ஒரு தனித்துவமான முயற்சி, இதில் மாணவர்கள் மூன்று மணி நேரம் தொடர்ந்து முக்கியக் கருத்துகளை விளக்கினர். இது குறித்து பேசிய மார்க் வித்யாலயா வின் முதல்வர் கே. கீதா, எங்கள் மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு பாராட்டத் தக்கது. இந்த சாதனைகளை படைத்ததற்கும் சர்வதேச அளவில் அங்கீக ரிக்கப்பட்டதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம்,” என்று கூறியுள்ளார்.