புதுக்கோட்டையில் நடைபெறும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில் கூடி இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகாநாடு தமிழ்நாட்டில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் நலன்களையெல்லாம் விரிவாக விவாதித்து தமிழ்நாட்டில் விவசாயம் வளர்வதற்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஊக்கம் பெற்று முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை பிரச்சினைகளைப் பற்றியும் விரிவாக விவாதிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மாநாடு நல்ல முடிவுகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் மேலும் ஒரு பலமான விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினுடைய இயக்கத்தை கட்டி வளர்ப்பதற்கு அனைத்துத் தோழர்களும் முழுமையாகப் பாடுபடுவார்கள் என்று நம்புகின்றேன். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த மாநாடு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அதற்கு துணை நிற்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த மாநாட்டில் கூடியிருக்கக்கூடிய தோழர்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு வெற்றிபெற இன்குலாப் ஜிந்தாபாத்.
புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டை சுதந்திரப் போராட்ட வீரர், முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அனுப்பியுள்ள காணொலி காட்சிப் பதிவு.