குறுக்கு விசாரணை
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கி ரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்தி ரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங் களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடந்த ஜூன் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி, ராபர்ட் புரூஸுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து சான்ற ளிக்கப்பட்ட ஆவணங்களை, சான்று ஆவணங்களாக நீதி மன்றத்தில் பதிவு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச் சந்திரன் முன் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நயினார் நாகேந்திரன் ஆஜராகியிருந்தார். அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
‘மக்களை காப்பவர்கள் மருத்துவர்கள்’
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் 82 ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், “அரசு மருத்துவக் கல்லூரி களில் மட்டும் ஆண்டுதோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இளநிலை மருத்துவர்களுக்கான பட்டம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றை உலகம் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் கொரோனா தொற்று மாற்றமடைந்து கொண்டே வந்தது. வரும் காலங்களில் ஏதேனும் ஒரு கிருமி உடன் வாழ வேண்டும் என விஞ்ஞா னிகள் கூறுகின்றனர். அப்போது மருத்துவர்கள் தான் மக்களைப் பாதுகாத்தனர். வரும் காலங்களில் மக்களுக் கான பாதுகாவலர்களாக இருக்கப் போவது மருத்துவர்கள் தான். மக்களை வாழ்விக்கப் போகிறவர்கள் மருத்துவர் கள்தான். இளநிலை மருத்துவப் படிப்போடு நிற்காமல் மேலும் படித்து, நல்ல நிலைக்கு செல்ல வேண்டும்” என்றார்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்
சென்னை: விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாக னங்களை நூறு நாட்கள் சிறையில் வைக்கும் சென்னை காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அன்பழகன் எழுதிய கடிதத்தில், “விபத்துகள் எதிர்பாராதவை என்றும், உடனடியாக கனரக வாகனங்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்வது தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஒரு பேருந்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்வதாகவும், 100 நாட்கள் சிறையில் வைத்தால் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை நட்டம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். பேருந்து ஓட்டுநர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிப்ப தாகவும், மருத்துவ பரிசோதனை நடத்துவதாகவும் தெரிவித் துள்ளார்.
கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
சென்னை: சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம் பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி செலவில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட கூடுதல் வகுப் பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப் பள்ளி யில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பை கள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார்.
‘பாமக பிரச்சனைக்கு திமுக காரணம் இல்லை’
திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள தைலா புரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை வெள்ளிக் கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு என்று தெரிவித்தார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் நடந்த தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர், ராமதாஸின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த தாக அவர் தெரிவித்தார். மேலும், “பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்து வதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடைய உள் மனது அப்படி சொல்லாது” என்றார்.
ஆன்-லைன் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி ருந்த வழக்கில், திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்-லைன் விமர்சனத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்விய டைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும் கோரியிருந்தனர். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நீதிபதி களை பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலம் இது. இவையெல்லாம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பலர் தங்கள் வீடு களில் இருந்தபடியே பார்ப்பதற்கு வசதி யாக ஓடிடி தளங்கள் உள்ளன. இது திரையரங்குகளுக்கு புதிய சவால் என்பதை, தயாரிப்பாளர்கள் மறந்து விடக்கூடாது” என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நிதித் துறை செயலாளர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக நிதித்துறை செயலாளராக செயல்பட்டு வரும் உதயச் சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை யில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத் துவர்கள் இதய அடைப்பை நீக்குவதற் கான சிகிச்சையை மேற் கொண்டனர். பின்னர் அவருக்கு இதயத்தில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.
‘முதல் மரியாதையை நிறுத்த வேண்டும்
’ சென்னை: ஈரோடு பந்தீஸ்வரர் கோவில் மகா பெரியகுண்டம் விழா வில் முதல் மரியாதை வழங்கக் கோரி தொட ரப்பட்ட வழக்கில், “பல கோவில் விழாக்களில் சட்டம், ஒழுங்கு பிரச் சனை ஏற்பட காரணமே முதல் மரியாதைதான். கோவில்களில் முதல் மரி யாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சி நடக்கிறது” என்று சென்னை உயர் நீதி மன்றம் சம்மட்டியடி அடித் திருக்கிறது.
மினி டைடல் பூங்கா
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்தபடி, விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைப் பதற்கான டெண்டரை அரசு கோரியது. அதன்படி, வரைபடம், வடி வமைப்பு தயார் செய்ய ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளது.