மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மாருதி மன்படே (வயது 65) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.