மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 50 சதவிகித கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவிலும் கெரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மும்பை ஆர்தர் சாலை சிறையில் கைதிகள் ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு கெரோனா உறுதியாகி உள்ளது.
இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இடைக்கால ஜாமின் மற்றும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாட்களுக்கு என்று விபரம் தெரிவிக்கப்படவில்லை. விசாரணை கைதிகளும், 7 ஆண்டுகளை வரை தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தற்காலிகமாக விடுதலை செய்யப்பட உள்ளனர்.
ஆனால் ஊபா உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் சிறையில் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.