யவத்மால் (மகாராஷ்டிரா), மார்ச் 27- தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்று கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரியை மகாராஷ்டிரா மாநில எல்லையான யவத்மாலில் காவல்துறையினர் நிறுத்தினர். கண்டெய்னர் லாரி எங்கே போகிறது? ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் கேட்டனர். இதற்கு ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்டெய்னரை திறக்க உத்தரவிட்டனர் காவல்துறையினர். அதைத் திறந்த போது கண்டெய்னர் லாரியில் 300 கூலித் தொழிலாளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கீழே இறக்கி விசாரித்தனர். அப்போதுதான் கொரானாவால் கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் சொந்த மாநிலம் ராஜஸ்தான் செல்வதற்கு வழியின்றி தவித்தோம். வேறுவழியில்லாமல் கண்டெய்னரில் பதுங்கி செல்கிறோம் எனக் கூறியுள்ளனர்.