பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் கோழிப் பண்ணைகளிலும் வெங்காய கொட்டகைகளிலும் பல நூறு டன்பெரிய வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் தோட்டகலைத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலைதொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத அவலம்நீடித்து வருகிறது. வட மாநிலத்தில் பெய்யும் கனமழை, விளைச்சல் குறைவுஎன பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் பெரிய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரும்பலூர், புதூர் மேலப்புலியூர் மற்றும் இருர் உள்ளிட்ட பகுதிகளில்உள்ள சின்ன வெங்காய கொட்டகைகளில் பல நூறு டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வெங்காயம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பதுக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.குறிப்பாக ஆலத்தூர் பகுதியில் உள்ள இருர் கிராமத்தில் வருவாயின்றிமூடப்பட்ட கறிக்கோழி பண்ணைகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்த பெரிய வெங்காய வியாபாரிகள் அந்த பண்ணைகளில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளனர். இதையடுத்து ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட தோட்டகலைத் துறை துணை இயக்குர் பாத்திமா, வேளாண் துறை இணை இயக்குநர் கருணாநிதி மற்றும் உழவர் உற்பத்தி பெருக்க துறை அலுவலர் கீதா ஆகியோர் ஆலத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பல்வேறு இடங்களில் வெங்காயம் டன்கணக்கில் பதுக்கப்பட்டிருந்தது தெரியவரவே தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கொட்டகைகாரர்கள், இந்த வெங்காயத்தை விதைக்காக பதுக்கியதாக கூறியுள்ளனர். இந்த பதுக்கலுக்கு பின்னால் திருச்சியில் வெங்காயமண்டி நடத்தும் பாஜகபிரமுகர் உள்ளதாக தகவல் வெளியாவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கதயங்குவதாக கூறப்படுகிறது என்றார்.