tamilnadu

img

கொரோனா தடுப்பூசி மருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் உருவாகிறது  - சீரம் நிறுவனம் 

கொரோனாவிற்கான தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் கூடுதலாக 100 மில்லியன் டோஸ் அளவுக்கு உருவாக்குகிறது.

ஜவி (GAVI) கூட்டணி மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஆகஸ்ட் மாதம் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தடுப்பூசிகளின் மொத்தமாக 200 மில்லியன் அளவுகள் வரை தயாரிக்கப்படுகிறது. இதனை குறைந்த வருமானமும் நாடுகளுக்கும், நடுத்தர நாடுகளுக்கும் வழங்கப்படும். 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேலும் 150 மில்லியன் டாலர் நிதியுதவியை பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜவி (GAVI) பெற்று ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அவர்கள் செவ்வாயன்று 100 மில்லியன் அளவு அதிகமாக தயாரிப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி மருந்தாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில் உருவமான தடுப்பூசி மும்பையில் மூன்றாம் கட்ட சோதனைகளை துவங்கியுள்ளது. தற்போது சீரம் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி மருந்தை விரைவில் கொண்டுவரவுள்ளது. இந்த மருந்தானது 2021 ஆம் ஆண்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.