தில்லியில் ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் படுகாயமடைந்து தில்லி குரு தேஜ்பகதூர் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.