https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
சீட்டுக் கம்பெனி ஊழல் பிரச்சனை மீண்டும் பெரிதாக எழுந்திருக்கிறது. பல்லாண்டு காலமாக பிஏசிஎல் சீட்டுக் கம்பெனி ஊழல் இழுத்துக் கொண்டிருக்கிறது. ரூ. 49 ஆயிரத்து, 100 கோடி அளவிற்கு மிகப்பெரிய ஊழலாக இது அரங்கேறி, 18 ஆண்டுகாலமாக 5.6 கோடி மக்களின் சிறு சேமிப்புத் தொகையை கொள்ளையடித்த ஊழல் இது. எளிய மக்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் சேமித்து வைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இதுபோன்ற சீட்டுக் கம்பெனிகளின் மீதான விசாரணைக்கு மோடி அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இன்றைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 350 சீட்டுக் கம்பெனிகள் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் பணத்தை கொள்ளையடித்திருக்கின்றன.