tamilnadu

இரண்டாம் நிலை காவலர் தேர்வு முன்னாள் படை வீரர்களுக்கு ஐந்து சதவீத ஒதுக்கீடு....

விருதுநகர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண் டாம் நிலை காவலர், சிறை வார்டன்மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்கள் 7,800 நிரப்பப்பட உள்ளது. இதில் ஐந்து சதவீதம் முன்னாள் படை வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.2017-ஆம் ஆண்டு செப்.17-ஆம் தேதிக்குப்பின் படையிலிருந்து வெளி வந்த முன்னாள் வீரர்கள், ஒராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் அக்டோபர் 26. 
விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.