tamilnadu

img

‘மக்கள் பிரச்சனைகள் அனைத்தையும் விரிவாக விவாதிக்க வேண்டும்’

நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் இன்று துவங்குகிறது

புதுதில்லி, நவ.17- பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க  வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரு மித்தக் குரலில் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் திங்களன்று துவங்கும் நிலை யில், அனைத்துகட்சி கூட்டம் சனி,  ஞாயிறு இரண்டு நாட்கள்நடைபெற்றது.  பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் உள்துறை அமை ச்சர் அமித்ஷா மற்றும் நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறை வேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் மற்றும் விவாதிக்கப்பட  வேண்டிய பொருள்கள் குறித்து முன்மொழி யப்பட்டது. கூட்டத்தொடரில் விவாதி க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன. 

ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல…

“நாடாளுமன்றங்களில் நிறை வேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கடந்த காலங்களில் நிலை க்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் பரிந்துரை செய்யப்படும். ஆனால் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தொடரில், அனைத்து சட்ட மசோதாக்களும் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டன. இது ஜனநா யகத்திற்கு ஏற்றதல்ல. குறைந்தபட்சம் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு (பிஸினஸ் அட்வைசரிங் கமிட்டி) விவா திக்க வேண்டும். அதுவும் நடைபெற வில்லை. ஆனால் இந்த கமிட்டி நாடாளுமன்றம் எத்தனை நாள் கூடு கிறது என்பதை தீர்மானிக்கும் குழு வாக மாறியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டி, விமர்சித்தனர்.

அரசியல் சட்டத்தின்  70ஆம் ஆண்டு விழா

அரசியல் சட்டம் நிறைவேற்றப் பட்ட 70 ஆம் ஆண்டு விழாவை நாடா ளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள்ளேயே நடத்தி சுருக்கினால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் மட்டுமே பேச முடியும். மிக முக்கியமான இவ்விழாவில் எல்லா கட்சியினரும் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். இதனை மக்களவை மற்றும் மாநிலங் களவையில் முன்வைத்து விவாதப் பொருளாக மாற்றி, அனைவரும் பேசு வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

பரூக் அப்துல்லா, ப.சிதம்பரத்திற்கு அனுமதி வழங்குக!

நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது நேரம் ஒதுக்கித்தரவேண்டும் என வலி யுறுத்திய எதிர்க்கட்சியின் தலைவர்கள், ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டது. இதேபோல் மாநி லங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நடைபெறுகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் கோரிக்கை முன் வைத்தன.

மேலும், தொடர்ந்து உயர்கல்வி நிறு வனங்களில் நடைபெறுகிற தற்கொலை விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் நாடாளு மன்றத்தில் விரிவான விவாதத்தை நடத்த வேண்டும்; விதி 193ன் கீழ் விவாதங்களை அனுமதிப்பதில்லை என்பதை கைவிட்டு, கவன ஈர்ப்பு தீர்மானங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும்; செம்மொழியான தமிழ்  மொழியின் வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; விலை வாசி உயர்வு குறித்தோ, வேலை யின்மை அதிகரிப்பு குறித்தோ நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

பொருளாதார வீழ்ச்சியை  விவாதித்திடுக!

நாட்டின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரி வான விவாதத்தை நடத்த வேண்டும். இதேபோல வெளிநாடுகளில் போடப்படுகிற ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லப்படுவதில்லை. ஊடகங்களில் வாயிலாக சொல்லப்படும் தகவல்கள் மட்டுமே தெரிகிறது. அந்த ஒப்பந்தங் கள் என்ன என்பது குறித்து நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு தெரி விக்க வேண்டும். இதுகுறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.  நாடு முழுவதும் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே அமலாக்கப்படுகிறது. வட  இந்தியா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இது நடைமுறைப்படுத்த ப்படுவதில்லை. ஆகவே இந்த பட்டியலை முழுமையாகப் பராமரித்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான விவாதம் நாடாளு மன்றத்தில் நடத்தப்பட வேண்டும். 

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி முறை யாக கிடைப்பதில்லை என்கிற புகாரை அனைத்து மாநில முதல்வர்களும் எழுப்பி வருகின்றனர். ஆகவே இது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். நூறு நாட்களை கடந்த பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக அரசு சொல்லி வருகிறது. ஆனால் யாரையும் அனுமதிப்பதில்லை. இதை  ஏற்க முடியாது. இதுகுறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடா ளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர்.