திரிபுரா முன்னாள் அமைச்சர் தோழர் பாதல் சவுத்ரி
பாஜக அரசு அராஜகம் - சிபிஎம் கடும் கண்டனம்
அகர்தலா, அக். 23- திரிபுராவில் இடதுமுன்னணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக செய லாற்றிய வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரு மான பாதல் சவுத்ரி, திரிபுரா பாஜக அரசால் அராஜகமான முறையில் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் அகர்தலா மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தோழர் பாதல் சவுத்ரி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் மீதும் அவர் பொறுப்பு வகித்த இடது முன்னணி அரசின் மீதும் திட்டமிட்டு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் பொய்வழக்கு- கைது எனும் அட்டூழியத்தை அரங்கேற்றி யிருக்கிறது திரிபுரா மாநில பாஜக அரசு. இந்த இழி செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.
திரிபுராவில் பல்லாண்டு காலம் இடது முன்னணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பாதல் சவுத்ரி. திரிபுரா பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், அகர்தலா உட்பட சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் மேம்பாடு களுக்காகவும், மிகச்சிறப்பாக செயல்பட்ட துறைகளில் ஒன்றாக பாதல் சவுத்ரி பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரிபுராவில் அராஜக மான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசு, பொறுப்பேற்றது முதல், இடது முன்னணி தலைவர்கள் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை குறி வைத்தும் பொய்வழக்கு, கைது, வன்முறை தாக்குதல்கள் உள்ளிட்ட அட்டூழியங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக தற்போது, பாதல் சவுத்ரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.630 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக திட்டமிட்டு பொய் வழக்கினை பதிவு செய்து, அப்போது பொறுப்பிலிருந்த பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை கைது செய்துள்ள பாஜக அரசு, அமைச்ச ராக இருந்த பாதல் சவுத்ரி மீதும் பொய் வழக்கு புனைந்தது. அதன் பேரில் அவரை கைது செய்ய மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் திரிபுரா உயர்நீதி மன்றத்தில் கடந்த திங்களன்று பாதல் சவுத்ரி தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. பாதல் சவுத்ரி தரப்பில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த தலைவர் களில் ஒருவரும், கொல்கத்தா மாநகராட்சி முன்னாள் மேயருமான பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆஜரானார். இந்த மனு மீதான உத்தரவை மறுநாள் அளிப்பதாகக் கூறி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே, தோழர் பாதல் சவுத்ரி திடீர் மாரடைப்பால் கடுமையாக பாதிக்கப் பட்டு அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார், கட்சியின் மாநில செயலாளர் கவுதம் தாஸ் மற்றும் இடதுமுன்னணித் தலைவர்கள் அருகிலிருந்து கவனித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லாமலேயே, திங்களன்று இரவே மருத்துவமனைக்குள் புகுந்து தோழர் பாதல் சவுத்ரியை கைது செய்வதாக அறிவித்து, காவல்துறையினரை குவித்துள்ளது பாஜக அரசு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர், “முன்னாள் அமைச்சர் பாதல் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளோம். அவர் உடல்நலம் தேறிய பின்னர் அவரை காவலில் எடுத்துக் கொள்வோம்” என்று கூறினார்.
அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்
திரிபுரா பாஜக அரசின் இத்தகைய இழி செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பாதல் சவுத்ரி, அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அவரை கைது செய்திருப்பதை கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இடதுமுன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, பொதுப்பணித்துறை அமைச்சராக பாதல் சவுத்ரி செய லாற்றிய காலகட்டத்தில் சில குறிப்பிட்ட திட்டங்களை நிறை வேற்றியது தொடர்பாக ப குற்றச்சாட்டுக்களை அவர் மீது தற் போதைய பாஜக மாநில அரசு புனைந்துள்ளது. இதுதொடர் பான முதல் தகவல் அறிக்கையில் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் உள்பட இதர மூத்த அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை குறி வைத்து ஆதாரங்களும் அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டுகளை புனைந்து எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
அதுமட்டுமல்ல, பாதல் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மீது திரிபுரா உயர்நீதிமன்றம் மறுநாள் காலை உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், முன்கூட்டியே அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய செயல்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது; கட்சி மீது எந்தக் களங்கத்தையும் கற்பித்துவிட முடியாது; ஏனென்றால் இடதுமுன்னணி அரசாங்கத்தின் ஆட்சி எத்தனை சிறப்பாக இருந்தது என்பதையும் எவ்வளவு நேர்மையான முறையில் நடந்தது என்பதையும் திரிபுரா மக்கள் நன்றாகவே அறிவார்கள். தோழர் பாதல் சவுத்ரி மீது புனையப்பட்டுள்ள வழக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதிபட எதிர்கொள்ளும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.